அப்போது கூறியதாவது...
1995 ஆம் ஆண்டில் தமுமுக தொடங்கிய போது நாங்கள் கையிலெடுத்த கோரிக்கைகüல் ஒன்று தமிழகத்தில் முஸ்லிம்களுக்கு தனி இடஒதுக்கீடுத் தரவேண்டும் என்பதாகும்.
1995 அக்டோபர் 29 ஆம் தேதி சென்னை இம்பீரியல் வளாகத்தில் தனி இட ஒதுக்கீட்டிற்காக முதல் கோரிக்கை மாநாட்டினை நடத்தினோம்.
இது தான் எமது குரல் ஒலித்த முதல் மாநாடாகும்! அதன் பிறகு 1995, 96, 97, 98 ஆம் ஆண்டுகüல் பாபர் மஸ்ஜித் தகர்க்கப்பட்ட ஒவ்வொரு டிசம்பர் 6ன் போதும் இடஒதுக்கீடு கோரிக்கையையும் முன்னிறுத்தி ஜனநாயகப் போராட்டங்களை தமுமுக நடத்தியது.
• 1997ல் தடையை மீறி பேரணி
• 1998ல் சென்னை முதல்வர் வீடு முற்றுகை
என களத்தில் பாபர் மஸ்ஜித் பிரச்சனையோடு, இட ஒதுக்கீடு முழக்கங்களையும் முன்வைத்தோம். காவல்துறை தேடுதல் வேட்டை என்ற பெயரில் நெருக்கடிகள் தந்தது. அரசு அடக்குமுறைகள் தொடர்ந்தன. அலை, அலையாய் தமுமுகவினர் கைது செய்யப்பட்டனர். போராட்டத்திற்காக வெளியூர்களிலிருந்து வாகனங்களில் திரண்டு வந்தவர்கள் தடுக்கப்பட்டனர். வாகனங்கள் நிறுத்தப்பட்டன. வாகனங்களில் வந்தவர்கள் நள்ளிரவில் கைது செய்யப்பட்டனர். தமிழக சிறைகள் நிறைந்தன.
உரிமைக்குரலை எழுப்பியதற்காக நாங்கள் சந்தித்த நெருக்கடிகள் வரலாற்றில் வடுக்களை ஏற்படுத்தின. அதன் பிறகு 1999 ஜுலை 4ல் தமுமுக சார்பில் முஸ்லிம்கüன் வாழ்வுரிமை மாநாடு நடத்தப்பட்டது. தமிழகத்தின் முக்கிய அரசியல் தலைவர்களும், அமைப்புகளும் பங்கேற்ற திருப்புமுனை மாநாடு அது!
இம்மாநாட்டில் திரண்ட மக்கள் வெள்ளத்தைப் பார்த்த பிறகுதான், இடஒதுக்கீட்டை வழங்காமல் இனி முஸ்லிம்களை திருப்திப்படுத்த முடியாது என்ற அரசியல் சூழல் ஏற்பட்டது. அதன் உச்சக்கட்டமாக 2004 மார்ச் 21 அன்று தமிழகத்தின் இதயப் பகுதியாகும் தஞ்சையில் லட்சக்கணக்கான ஆண்களும், பெண்களும் பங்கேற்ற மாபெரும் பேரணியை தமுமுக நடத்தியது. கடந்த 10 வருடங்கüல் இந்தியாவில் நடைபெற்ற பிரம்மாண்ட பேரணிகளில் இதுவும் ஒன்று. இடஒதுக்கீடு கோரிக்கை மக்கள் மயப்படுத்தப்பட இப்பேரணி பெரிதும் காரணமாகியது. இவை தவிர,
•இடஒதுக்கீட்டை மட்டுமே முன்னிறுத்தி 15 மாவட்ட மாநாடுகள் தமுமுக சார்பில் மிகுந்த எழுச்சியோடு நடத்தப்பட்டது.
இதே கோரிக்கைக்காக தொண்டரணி அணிவகுப்புகளை தமுமுக இரண்டு முறை நடத்தியுள்ளது.
இத்தகைய நெடிய லட்சியப் போராட்டங்கள் தான் தமிழக அரசை அவசர சட்டம் மூலம் தனி இடஒதுக்கீட்டை வழங்க வழி வகுத்தது. முதல்வர் கலைஞர் அவர்கள் 3.5% தனி இடஒதுக்கீட்டை முஸ்லிம்களுக்கும், கிருஸ்தவர்களுக்கும் தனித்தனியாக வழங்கியுள்ளார்.
இப்போது தமிழக சட்டமன்றத்திலும் ஒருமனதாக இச்சட்டம் நிறைவேற்றப்பட்டு அமலுக்கு வந்துள்ளது.
இந்த வெற்றி மாபெரும் வெற்றியாகும்! சிறைசென்று, காயம்பட்டு, இழப்புகளை சந்தித்து, நெருப்பாற்றில் நீந்தி எமது உரிமையைப் பெற்றிருக்கிறோம்.
இதனை சாத்தியப்படுத்தி தந்த தமிழக முதல்வர் கலைஞர் அவர்களுக்கு நன்றி கூறுவது எமது பண்பாடாகும். அதற்காக தமுமுக சார்பில் நன்றி அறிவிப்பு மாநாடு நடத்த திட்டமிட்டுள்ளோம்.
இறைவன் நாடினால் எதிர்வரும் நவம்பர் 24 அன்று சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டரங்கில் இம்மாநாடு மிகுந்த எழுச்சியோடு நடைபெற உள்ளது. கன்னியாகுமரி முதல் சென்னை வரை இருக்கும் அனைத்து ஊர்களிலிருந்தும் பேருந்து, வேன், கார் உள்ளிட்ட வாகனங்களில் பல்லாயிரக்கணக்கானோர் வருகை தர உள்ளனர். பெண்கள் பெருமளவில் கலந்துகொள்ள இருப்பதால் மாநாட்டில் பெண்களுக்கு தனி இடவசதி செய்யப்பட்டுள்ளது. ரயில்கள் மூலம் அதிக அளவில் மக்கள் குவிய உள்ளனர். கோவையிலிருந்து மாநாட்டை முன்னிட்டு சிறப்பு ரயில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இம்மாநாட்டில் தமிழக முதல்வருக்கு முஸ்லிம் அமைப்புகளின் சார்பில் சிறப்பு செய்யப்பட உள்ளது. கேரளா, கர்நாடகம், மும்பை, அந்தமான், புதுவை ஆகிய மாநிலங்களிலிருந்தும் பேராளர்கள் வருகை தர உள்ளனர். இம்மாநிலங்களில் வாழும் தமிழக முஸ்லிம்களின் சார்பில் முதல்வருக்கு நினைவு பரிசுகள் வழங்கப்பட உள்ளது.
இம்மாநாட்டில் கிருஸ்தவ சமுதாய தலைவர்களும் பங்குக் கொண்டு முதல்வருக்கு நன்றி கூற உள்ளனர்.





+Satellite+Image.jpg)





