Sunday, October 14, 2007

வாக்காளர் பட்டியல் திருத்தும் பணி நவம்பர் 2007 முதல் வாரத்தில் தொடங்குகிறது!

வாக்காளர் பட்டியல் திருத்தும் பணி நவம்பர் முதல் வாரத்தில் தொடங்குகிறது!

கோவை, அக்.14- வாக்காளர் பட்டியல் திருத்தும்பணி நவம்பர் முதல் வாரத்தில் தொடங்கும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ்குப்தா தெரிவித்துள்ளார்.

வெளிநாடுகளில் வசிக்கும் முஸ்லிம்கள்; தங்கள் உறவினர்கள் மற்றும் நண்பர்களின் பெயர்கள் விடுபட்டோ அல்லது மாற்றப்பட்டோ இருந்தால் இணையத்தில் உள்ள வாக்காளர் பட்டியல் மூலம் சரி பார்த்து சம்பந்தப்பட்வர்களுக்கு தெரியப்படுத்தி தவறுகளை திருத்துவதற்கு உதவிடுமாறு வெளிநாடு வாழ் முஸ்லிம்களை கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் முஸ்லிம்களின் வாக்காளர் பட்டியல் கணக்கெடுப்பை தனியாக தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் எடுக்கவிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

முஸ்லிம்களின் பெயர்கள்கள் திட்டமிட்டே வாக்காளர்பட்டியலில் இருந்து நீக்கப்படுகிறது என்ற குற்றச்சாட்டும் முஸ்லிம்கள் மத்தியில் பரவலாக உள்ளது.

கோவை உள்ளிட்ட மேற்கு மண்டல மாவட்டங்களில் புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் பணி தீவிரப்படுத்துவதற்கான ஆலோசனை கூட்டம் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடந்தது.
அதில் நரேஷ்குப்தா தலைமை தாங்கினார். இதில், 5 மாவட்ட ஆட்சியர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்துக்குப்பின் நரேஷ்குப்தா செய்தியாளர்களிடம் கூறியதாவது:

2008-ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி 18 வயது பூர்த்தி அடைபவர்கள் வாக்காளர் பட்டியலில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். இதற்காக வாக்காளர் பட்டியல் திருத்தும் பணி நவம்பர் முதல் வாரத்தில் தொடங்குகிறது.
இது 2008 ஜனவரி 10-ஆம் தேதி நிறைவு பெறும். வாக்காளர்களில் பலர் இன்னும் புகைப்படம் கொடுக்காமல் இருக்கின்றனர். அதனால் புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் தயாரிப்பு பணியில் 100 சதவீத இலக்கை எட்ட முடியவில்லை.

தமிழகம் முழுவதும் சரா சரியாக 95 சதவீதம் புகைப் படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. இதுவரை 93 சதவீத வாக் காளர் அடையாள அட்டை கள் வழங்கப்பட்டு விட்டன.

மீதமுள்ளவர்கள் அந்தந்த தாசில்தார் அலுவலகத்தில் உள்ள தேர்தல் பிரிவில் பெற்றுக் கொள்ளலாம். முகவரி மாறி இருந்தால் விண்ணப்பம் 8 (ஏ) பூர்த்தி செய்து கொடுக்கலாம். ஒரே நபர் இரு முகவரியில் வாக் காளர் அட்டையாள அட்டை வைத்திருந்தால் அவை பறிமுதல் செய்யப்படும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ்குப்தா தெரிவித்துள்ளார்.

No comments: