Wednesday, June 25, 2008

IUML-leader-GM Banathwala passes-away. பனாத்வாலா வபாஃத்ஆனார்கள்

இந்திய யூனியன் முஸ்லீம் லீக்கீன் தேசியத் தலைவர் குலாம் முகம்மது பனாத்லாவா அவர்கள் இன்று 25-06-2008 மாலை மும்பையில் வபாஃத்ஆனார்கள் இன்னாலில்லாஹி வஇன்னாஇலைஹி ரஜிவூன்.


பனாத்வாலா அவர்கள் 1933ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதி மும்பையில் பிறந்தார். மும்பை பல்கலைக் கழகத்தில் எம்.காம். பி.எட். பட்டப்படிப்பை முடித்தார். 1954 முதல் 1962 வரை அஞ்சுமனே இஸ்லாம் உயர்நிலைப்பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றினார். இக்காலகட்டத்தில் காயிதேமில்லத் இஸ்மாயில் சாகிப் அவர்களை சந்தித்து முஸ்லிம் லீகில் தன்னை இணைத்துக் கொண்டார்.மும்பை உமர்காடி சட்டமன்றத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு 1967 முதல் 1977 வரை மஹாராஷ்டிர சட்டமன்ற உறுப்பினராக செயல்பட்டார்.இக்காலகட்டத்தில் மஹாராஷ்டிர அரசு கருத்தடை சட்டம், பசுவதை சட்டம், வந்தேமாதரம் பாடல் கட்டாயம் பாட வேண்டும் என்றெல்லாம் சட்டம் கொண்டு வந்தபோது அவற்றை எதிர்த்து கையெழுத்து இயக்கம் உள்ளிட்ட அறப்போராட்டங்கள் நடத்தி அவற்றில் வெற்றியும் பெற்றவர்.


பாராளுமன்றத்திற்கு கேரள மாநிலம் பொன்னானி தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு 1971 முதல் 1991 வரையிலும் 1996 முதல் 2004 வரையிலும் உறுப்பினராக இருந்தவர்.சென்னை முஸ்லிம் அமைப்புகளால் 'சிறந்த சமூக சேவகர் தங்கப்பதக்க விருது பனாத்வாலாவுக்கு வழங்கபப்ட்டது. தமிழக முதல்வர் கருணாநிதி அவர்கள் இந்த விருதினை வழங்கினார்.இப்றாஹீம் சுலைமான் சேட் மறைவுக்குப் பின்னர் இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தேசியத் தலைவராக பணியாற்றி வந்தார்.


முஸ்லிம் தனியார் சட்ட வாரியத்தின் நிர்வாகக் குழு உறுப்பினராக வரை பணியாற்றி வந்தார். அலிகர் சர்வ கலாசாலை ஆட்சிக்குழு உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளிலும் பொறுப்பு வகித்து வந்தார்.கடந்த ஜூன் 20, 21 ஆகிய தேதிகளில் சென்னையில் நடைபெற்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் 60ஆம் ஆண்டு நிறைவு மணிவிழா மாநாட்டில் கலந்துகொண்டதே பனாத்வாலாவின் கடைசி நிகழ்ச்சியாகும் இந் நிகழ்ச்சியை குறிப்பிட்டு முதல்வர் கலைஞர் அவர்கள் இறங்கள் செய்தி வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


-- ------~~~----------~~~----------~~~--------------~~~----------------~~~----------~~~--

"அல்லாஹ் உங்களுக்கு உயிர் கொடுக்கிறான்; பின்னர் அவனே உங்களை மரணம் அடையச் செய்கிறான்; பின்னர் கியாம நாளன்று அவன் உங்களை ஒன்று சேர்ப்பான் - இதில் சந்தேகமேயில்லை" எனினும் மனிதரில் பெரும்பாலோர் (இதை) அறியமாட்டார்கள் என்று (நபியே!) நீர் கூறும். அல்-குர்ஆன் 45-26
قُلِ اللَّهُ يُحْيِيكُمْ ثُمَّ يُمِيتُكُمْ ثُمَّ يَجْمَعُكُمْ إِلَى يَوْمِ الْقِيَامَةِ لاَ رَيْبَ فِيه ِِ وَلَكِنَّ أَكْثَرَ النَّاسِ لاَ يَعْلَمُونَ
------~~~----------~~~----------~~~--------------~~~----------------~~~----------~~~--------------

Thursday, November 22, 2007

Nov-24. முதல்வருக்கு நன்றி அறிவிப்பு மாநாடு.

சென்னை நவம் 22: தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் சிறுபான்மையினருக்கு தனி இடஒதுக்கீடு வழங்கிய தமிழக முதல்வர் கலைஞருக்கு நன்றி அறிவிப்பு மாநாடு நடைபெறுவதையொட்டி தலைவர் பேரா. ஜவாஹிருல்லாஹ் மற்றும் கழக பொதுச் செயலாளரும், தமிழக வக்ஃபு வாரிய தலைவருமான செ.ஹைதர் அலி ஆகியோர் சென்னையில் உள்ள பிரசிடென்ட் ஹோட்டலில் பத்திரிக்கையாளர்களை சந்தித்தனர்.



இப்பேட்டியின் போது பொருளாளர் ஒ.யு.ரஹ்மத்துல்லாஹ், துணைப்பொதுச் செயலாளர் ஜே.எஸ்.ரிஃபாயி, மாநிலச் செயலாளர்கள் எம்.தமிமுன் அன்சாரி, கோவை இ.உமர், ப.அப்துல் சமது, மௌலா. எம்.நாஸர் ஆகியோரும் உடன் இருந்தனர்.



அப்போது கூறியதாவது...


1995 ஆம் ஆண்டில் தமுமுக தொடங்கிய போது நாங்கள் கையிலெடுத்த கோரிக்கைகüல் ஒன்று தமிழகத்தில் முஸ்லிம்களுக்கு தனி இடஒதுக்கீடுத் தரவேண்டும் என்பதாகும்.


1995 அக்டோபர் 29 ஆம் தேதி சென்னை இம்பீரியல் வளாகத்தில் தனி இட ஒதுக்கீட்டிற்காக முதல் கோரிக்கை மாநாட்டினை நடத்தினோம்.


இது தான் எமது குரல் ஒலித்த முதல் மாநாடாகும்! அதன் பிறகு 1995, 96, 97, 98 ஆம் ஆண்டுகüல் பாபர் மஸ்ஜித் தகர்க்கப்பட்ட ஒவ்வொரு டிசம்பர் 6ன் போதும் இடஒதுக்கீடு கோரிக்கையையும் முன்னிறுத்தி ஜனநாயகப் போராட்டங்களை தமுமுக நடத்தியது.


• 1997ல் தடையை மீறி பேரணி


• 1998ல் சென்னை முதல்வர் வீடு முற்றுகை


என களத்தில் பாபர் மஸ்ஜித் பிரச்சனையோடு, இட ஒதுக்கீடு முழக்கங்களையும் முன்வைத்தோம். காவல்துறை தேடுதல் வேட்டை என்ற பெயரில் நெருக்கடிகள் தந்தது. அரசு அடக்குமுறைகள் தொடர்ந்தன. அலை, அலையாய் தமுமுகவினர் கைது செய்யப்பட்டனர். போராட்டத்திற்காக வெளியூர்களிலிருந்து வாகனங்களில் திரண்டு வந்தவர்கள் தடுக்கப்பட்டனர். வாகனங்கள் நிறுத்தப்பட்டன. வாகனங்களில் வந்தவர்கள் நள்ளிரவில் கைது செய்யப்பட்டனர். தமிழக சிறைகள் நிறைந்தன.

உரிமைக்குரலை எழுப்பியதற்காக நாங்கள் சந்தித்த நெருக்கடிகள் வரலாற்றில் வடுக்களை ஏற்படுத்தின. அதன் பிறகு 1999 ஜுலை 4ல் தமுமுக சார்பில் முஸ்லிம்கüன் வாழ்வுரிமை மாநாடு நடத்தப்பட்டது. தமிழகத்தின் முக்கிய அரசியல் தலைவர்களும், அமைப்புகளும் பங்கேற்ற திருப்புமுனை மாநாடு அது!



இம்மாநாட்டில் திரண்ட மக்கள் வெள்ளத்தைப் பார்த்த பிறகுதான், இடஒதுக்கீட்டை வழங்காமல் இனி முஸ்லிம்களை திருப்திப்படுத்த முடியாது என்ற அரசியல் சூழல் ஏற்பட்டது. அதன் உச்சக்கட்டமாக 2004 மார்ச் 21 அன்று தமிழகத்தின் இதயப் பகுதியாகும் தஞ்சையில் லட்சக்கணக்கான ஆண்களும், பெண்களும் பங்கேற்ற மாபெரும் பேரணியை தமுமுக நடத்தியது. கடந்த 10 வருடங்கüல் இந்தியாவில் நடைபெற்ற பிரம்மாண்ட பேரணிகளில் இதுவும் ஒன்று. இடஒதுக்கீடு கோரிக்கை மக்கள் மயப்படுத்தப்பட இப்பேரணி பெரிதும் காரணமாகியது. இவை தவிர,
•இடஒதுக்கீட்டை மட்டுமே முன்னிறுத்தி 15 மாவட்ட மாநாடுகள் தமுமுக சார்பில் மிகுந்த எழுச்சியோடு நடத்தப்பட்டது.



இதே கோரிக்கைக்காக தொண்டரணி அணிவகுப்புகளை தமுமுக இரண்டு முறை நடத்தியுள்ளது.



இத்தகைய நெடிய லட்சியப் போராட்டங்கள் தான் தமிழக அரசை அவசர சட்டம் மூலம் தனி இடஒதுக்கீட்டை வழங்க வழி வகுத்தது. முதல்வர் கலைஞர் அவர்கள் 3.5% தனி இடஒதுக்கீட்டை முஸ்லிம்களுக்கும், கிருஸ்தவர்களுக்கும் தனித்தனியாக வழங்கியுள்ளார்.



இப்போது தமிழக சட்டமன்றத்திலும் ஒருமனதாக இச்சட்டம் நிறைவேற்றப்பட்டு அமலுக்கு வந்துள்ளது.



இந்த வெற்றி மாபெரும் வெற்றியாகும்! சிறைசென்று, காயம்பட்டு, இழப்புகளை சந்தித்து, நெருப்பாற்றில் நீந்தி எமது உரிமையைப் பெற்றிருக்கிறோம்.


இதனை சாத்தியப்படுத்தி தந்த தமிழக முதல்வர் கலைஞர் அவர்களுக்கு நன்றி கூறுவது எமது பண்பாடாகும். அதற்காக தமுமுக சார்பில் நன்றி அறிவிப்பு மாநாடு நடத்த திட்டமிட்டுள்ளோம்.



இறைவன் நாடினால் எதிர்வரும் நவம்பர் 24 அன்று சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டரங்கில் இம்மாநாடு மிகுந்த எழுச்சியோடு நடைபெற உள்ளது. கன்னியாகுமரி முதல் சென்னை வரை இருக்கும் அனைத்து ஊர்களிலிருந்தும் பேருந்து, வேன், கார் உள்ளிட்ட வாகனங்களில் பல்லாயிரக்கணக்கானோர் வருகை தர உள்ளனர். பெண்கள் பெருமளவில் கலந்துகொள்ள இருப்பதால் மாநாட்டில் பெண்களுக்கு தனி இடவசதி செய்யப்பட்டுள்ளது. ரயில்கள் மூலம் அதிக அளவில் மக்கள் குவிய உள்ளனர். கோவையிலிருந்து மாநாட்டை முன்னிட்டு சிறப்பு ரயில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.



இம்மாநாட்டில் தமிழக முதல்வருக்கு முஸ்லிம் அமைப்புகளின் சார்பில் சிறப்பு செய்யப்பட உள்ளது. கேரளா, கர்நாடகம், மும்பை, அந்தமான், புதுவை ஆகிய மாநிலங்களிலிருந்தும் பேராளர்கள் வருகை தர உள்ளனர். இம்மாநிலங்களில் வாழும் தமிழக முஸ்லிம்களின் சார்பில் முதல்வருக்கு நினைவு பரிசுகள் வழங்கப்பட உள்ளது.


இம்மாநாட்டில் கிருஸ்தவ சமுதாய தலைவர்களும் பங்குக் கொண்டு முதல்வருக்கு நன்றி கூற உள்ளனர்.

Sunday, October 14, 2007

வாக்காளர் பட்டியல் திருத்தும் பணி நவம்பர் 2007 முதல் வாரத்தில் தொடங்குகிறது!

வாக்காளர் பட்டியல் திருத்தும் பணி நவம்பர் முதல் வாரத்தில் தொடங்குகிறது!

கோவை, அக்.14- வாக்காளர் பட்டியல் திருத்தும்பணி நவம்பர் முதல் வாரத்தில் தொடங்கும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ்குப்தா தெரிவித்துள்ளார்.

வெளிநாடுகளில் வசிக்கும் முஸ்லிம்கள்; தங்கள் உறவினர்கள் மற்றும் நண்பர்களின் பெயர்கள் விடுபட்டோ அல்லது மாற்றப்பட்டோ இருந்தால் இணையத்தில் உள்ள வாக்காளர் பட்டியல் மூலம் சரி பார்த்து சம்பந்தப்பட்வர்களுக்கு தெரியப்படுத்தி தவறுகளை திருத்துவதற்கு உதவிடுமாறு வெளிநாடு வாழ் முஸ்லிம்களை கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் முஸ்லிம்களின் வாக்காளர் பட்டியல் கணக்கெடுப்பை தனியாக தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் எடுக்கவிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

முஸ்லிம்களின் பெயர்கள்கள் திட்டமிட்டே வாக்காளர்பட்டியலில் இருந்து நீக்கப்படுகிறது என்ற குற்றச்சாட்டும் முஸ்லிம்கள் மத்தியில் பரவலாக உள்ளது.

கோவை உள்ளிட்ட மேற்கு மண்டல மாவட்டங்களில் புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் பணி தீவிரப்படுத்துவதற்கான ஆலோசனை கூட்டம் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடந்தது.
அதில் நரேஷ்குப்தா தலைமை தாங்கினார். இதில், 5 மாவட்ட ஆட்சியர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்துக்குப்பின் நரேஷ்குப்தா செய்தியாளர்களிடம் கூறியதாவது:

2008-ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி 18 வயது பூர்த்தி அடைபவர்கள் வாக்காளர் பட்டியலில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். இதற்காக வாக்காளர் பட்டியல் திருத்தும் பணி நவம்பர் முதல் வாரத்தில் தொடங்குகிறது.
இது 2008 ஜனவரி 10-ஆம் தேதி நிறைவு பெறும். வாக்காளர்களில் பலர் இன்னும் புகைப்படம் கொடுக்காமல் இருக்கின்றனர். அதனால் புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் தயாரிப்பு பணியில் 100 சதவீத இலக்கை எட்ட முடியவில்லை.

தமிழகம் முழுவதும் சரா சரியாக 95 சதவீதம் புகைப் படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. இதுவரை 93 சதவீத வாக் காளர் அடையாள அட்டை கள் வழங்கப்பட்டு விட்டன.

மீதமுள்ளவர்கள் அந்தந்த தாசில்தார் அலுவலகத்தில் உள்ள தேர்தல் பிரிவில் பெற்றுக் கொள்ளலாம். முகவரி மாறி இருந்தால் விண்ணப்பம் 8 (ஏ) பூர்த்தி செய்து கொடுக்கலாம். ஒரே நபர் இரு முகவரியில் வாக் காளர் அட்டையாள அட்டை வைத்திருந்தால் அவை பறிமுதல் செய்யப்படும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ்குப்தா தெரிவித்துள்ளார்.

Friday, June 8, 2007

தொடர்ந்து மனித உரிமை மீறல்களில் ஈடுபடும் இலங்கை அரசின் மனித உரிமை மீறல்கள்!

தொடர்ந்து மனித உரிமை மீறல்களில் ஈடுபடும் இலங்கை அரசின் மனித உரிமை மீறல்கள்!


தமிழக மீனவர்களை சிறைபிடிப்பதும், அவர்களது உடமை உயிர்களுக்கு சேதம் எற்படுத்துவதுமாய் இருந்த இலங்கை அரசின் அத்து மீறல்கள் இப்போது வெளிநாட்டிலிருந்து இலங்கை வழியாக வந்துள்ள தமிழர்கள் மீது தனது மனித உரிமை மீறல்களை கட்டவிழ்த்து விட்டுள்ளது.


ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவன விமானத்தின் மூலம் தாயகம் சென்றுள்ள நாகை மாவட்டத்தைச் சேர்ந்த ஜாகிர் உசேன் என்பவரை கொழும்பு விமான நிலையத்தில் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவன ஊழியர்கள் சரமாரியாக அடித்து உதைத்துள்ளனர்.


நாகை மாவட்டம் இருக்கை என்ற ஊரைச் சேர்ந்தவர் ஜாகிர் உசேன் (41). இவர் உள்பட 130 பயணிகள் கொழும்பிலிருந்து திருச்சி வரும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் நேற்று பயணித்துள்ளனர்.


விமானம் நேற்று காலை 7.30 மணிக்குப் புறப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் விமானத்தில் கோளாறு ஏற்பட்டதால் விமானம் கிளம்புவது தாமதமானது. அரை மணி நேர தாமதத்திற்குப் பின்னர் விமானம் கிளம்பியது.


ஆனால் கிளம்பிய சில விநாடிகளிலேயே விமானம் நிறுத்தப்பட்டது. கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பயணிகள் விமானத்திலேயே அமர வைக்கப்பட்டிருந்தனர்.


பின்னர் பயணிகளை தரை இறக்கிய ஏர்லைன்ஸ் ஊழியர்கள், விமான நிலையத்திலேயே காத்திருக்குமாறு அறிவுறுத்தினர். பின்னர் 11 மணிக்கு பயணிகளை விமானத்தில் ஏறுமாறு கூறினர். இன்னும் அரை மணி நேரத்தில் விமானம் கிளம்பும் என்றும் தெரிவிக்கப்பட்டது.


ஆனால் விமானத்தில் பயணிகள் ஏறி அமர்ந்த பின்னர் மீண்டும் அனைவரையும் கீழே இறங்கி விமான நிலையத்தில் அமருமாறு ஊழியர்கள் கூறியுள்ளனர். இதனால் கோபமடைந்த பயணிகள் என்ன பிரச்சினை என்று ஆவேசமாக கேட்டனர்.


அப்போது ஜாகிர் உசேன், சற்று கோபமாக, வேறு ஏதாவது ஏற்பாடு செய்யக் கூடாதா என்று கேட்டுள்ளார்.ஆனால் அதைக் கண்டுகொள்ளாத ஊழியர்கள் மற்றும் பாதுகாவலர்கள், பயணிகளை வலுக்கட்டாயமாக கீழே இறக்கியுள்ளனர்.


ஆனால் ஜாகிர் உசேனை மட்டும் இறங்க விடாமல் தடுத்த பாதுகாவலர்கள் அவரை விமானத்திலேயே அமர வைத்தனர். பின்னர் கைவிலங்கிட்டு புகைப்படம் எடுத்தனர். பிறகு சரமாரியாக அடித்து உதைக்க ஆரம்பித்தனர்.


வலி தாங்க முடியாமல் ஜாகிர் உசேன் போட்ட கூச்சலால், கீழே இறங்கிக் கொண்டிருந்த சக பயணிகள் வேகமாக விமானத்திற்குள் வந்தனர். அனைவரும் பாதுகாவலர்களைத் தடுத்து நிறுத்தி ஜாகிர் உசேனைக் காப்பாற்றி கீழே அழைத்துச் சென்றனர்.


இப்படியாக அடி உதை வாங்கி அலைக்கழிக்கப்பட்ட பயணிகள் ஒரு வழியாக திருச்சி வந்து சேர்ந்துள்ளனர்.

இது போன்ற மனித உரிமை மீறல்களில் ஈடும்படும் இலங்கை அரசின் அராஜகப்போக்கை தமிழக அரசும் மத்திய அரசும் வேடிக்கை பார்ப்பது ஏன்?


வெளிநாடுகளிலிருந்து இலங்கை வழியாக வரும் பயனிகளின் பாதுகாப்பை அரசு உறுதி செய்வது எப்பொழுது?


தொடர்ந்து தமிழர்கள் மீது காழ்ப்புணர்வுகொண்டு தாக்குதல் நடத்தி வரும் இலங்கை அரசின் மனித உரிமை மீறலைகண்டிப்பதோடு தமிழஅரசின் நடவடிக்கையையும் எதிர்பார்கிறோம்.

Thursday, June 7, 2007

ஓமனை தாக்கிய கோனு புயல்.

***
அல்லாஹ்வையன்றி (வேறு) நாயன் இல்லை. அவனே உயிர்ப்பிக்கிறான்; அவனே மரிக்கச் செய்கிறான்; அவனே உங்கள் இறைவனாகவும் முன் சென்ற உங்கள் மூதாதையரின் இறைவனாகவும் இருக்கின்றான். ஆனால், அவர்கள்(இறைநிராகரிப்பாளர்கள்) சந்தேகத்தில் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். ஆகவே, வானம் ஒரு தெளிவான புகையைக் கொண்டு வரும் நாளை நீர் எதிர் பார்ப்பீராக. (அப்புகை) மனிதர்களைச் சூழ்ந்து கொள்ளும்; ''இது நோவினை செய்யும் வேதனையாகும்.'' அல்-குர்ஆன் 44:08,09,10,11.

****************************************

----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
செய்தி: மஸ்கட் (ஓமன்): கோனு என பெயரிடப்பட்ட புயல், ஓமன் நாட்டின் கிழக்குக் கடற்கரையை செவ்வாய்கிழமை அதிகாலை தாக்கியது. இதையடுத்து ராணுவம் உஷார்படுத்தப்பட்டது. கடலோரப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு அனுப்பப்பட்டனர்.இந்தியப் பெருங்கடலில் உருவான கோனு புயல், வட மேற்காக நகர்ந்து, ஓமன் நாட்டின் கிழக்கில் உள்ள சுர் மற்றும் ரா ஆகிய பகுதிகளின் கடற்கரையை அடைந்தது.



பலத்த சூறாவளிக் காற்றுடன் கன மழையும் பெய்ததால் அந்தப் பகுதிகளில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. புதன்கிழமை அதிகாலை இந்தப் புயல் கரையைக் கடந்தது. இதனால் அப்பகுதியில் பெரும் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக அஞ்சப்படுகிறது. இருப்பினும், சுர் மற்றும் ரா ஆகிய நகரங்களில் எந்த அளவுக்கு பாதிப்பு ஏற்பட்டது என்பது தெளிவாகத் தெரியவில்லை. புயல் காரணமாக தலைநகர் மஸ்கட் உள்ளிட்ட பல நகரங்களில் கன மழை பெய்து வருகிறது. புயல் காரணமாக மணிக்கு 170 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்றும், 12 மீட்டர் அளவுக்கு கடல் அலைகளும் எழுந்தன. ஓமன் நாட்டில் எழுந்த புயல்களிலேய மிகவும் மோசமான புயல் இதுதான் என்று அந்நாட்டு பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது. புயல் காரணமாக ஓமனில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. அல் ஹலானியத், மசிரா தீவுகளில் வசிப்பவர்கள் பாதுகாப்பான பகுதிகளுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டனர். கடலோரப் பகுதிகளில் வசிப்பவர்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு அப்புறப்படுத்தப்பட்டனர். அப்பகுதிகளில் உச்சகட்ட அபாய அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது.

தொலைத்தொடர்பு வசதிகள் துண்டிக்கப்படும் என்பதால் வயர்லஸ் மற்றும் சாட்டிலைட் போன்களுக்கு அரசு ஏற்பாடு செய்திருந்தது. இதன் மூலம் மீட்பு நடவடிக்கைகளில் சுணக்கம் ஏற்படாமல் தடுக்க அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைய மேற்கொண்டுள்ளது. கடந்த 1890ம் ஆண்டு ஓமனைத் தாக்கிய புயலில் 700 பேர் பலியானார்கள். அதன் பின்னர் எழுந்துள்ள மோசமான புயல் கோனுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

வானம் ஒரு தெளிவான புகையைக் கொண்டு வரும்நாளை நீர் எதிர் பார்ப்பீராக. (அப்புகை) மனிதர்களைச் சூழ்ந்து கொள்ளும்; அல்-குர்ஆன்44:10


**********************************************************************


அல்லாஹ் எந்த ஓர் ஆத்மாவுக்கும் அது தாங்கிக் கொள்ள முடியாத அளவு கஷ்டத்தை கொடுப்பதில்லை; அது சம்பாதித்ததின் நன்மை அதற்கே; அது சம்பாதித்த தீமையும் அதற்கே!

(முஃமின்களே! பிரார்த்தனை செய்யுங்கள்:) ''எங்கள் இறைவா! நாங்கள் மறந்து போயிருப்பினும், அல்லது நாங்கள் தவறு செய்திருப்பினும் எங்களைக் குற்றம் பிடிக்காதிருப்பாயாக! எங்கள் இறைவா! எங்களுக்கு முன் சென்றோர் மீது சுமத்திய சுமையை போன்று எங்கள் மீது சுமத்தாதிருப்பாயாக! எங்கள் இறைவா! எங்கள் சக்திக்கப்பாற்பட்ட (எங்களால் தாங்க முடியாத) சுமையை எங்கள் மீது சுமத்தாதிருப்பாயாக! எங்கள் பாவங்களை நீக்கிப் பொறுத்தருள்வாயாக! எங்களை மன்னித்தருள் செய்வாயாக! எங்கள் மீது கருணை புரிவாயாக! நீயே எங்கள் பாதுகாவலன்; காஃபிரான கூட்டத்தாரின் மீது (நாங்கள் வெற்றியடைய) எங்களுக்கு உதவி செய்தருள்வாயாக!'' (அல்-குர்ஆன் 2:286)

...நீங்கள் முஸ்லிம்களாக அன்றி மரணிக்காதீர்கள்.'' (அல்-குர்ஆன் 2:132)


*********

Wednesday, June 6, 2007

Cyclones and hurricanes explained. Sustained Winds (km/h) - Damage - Storm Surge


Cyclones and hurricanes explained


Gulf News staff report

What is the difference between a tornado, a cyclone and a hurricane? Read below to find out more:

Tornado: Tornados are the most violent type of storms. A tornado appears as a rotating, funnel-shaped cloud that extends from a thunderstorm to the ground with whirling winds that can reach 480 kilometres per hour. Damage paths can be in excess of one mile wide and 80 kilometres long. Occasionally, tornadoes develop so rapidly that little, if any, advance warning is possible Tropical Cyclone: The terms "hurricane" and "typhoon" are regionally specific names for a strong "tropical cyclone". A hurricane is the generic term for a low pressure system that generally forms in the tropics. A typical cyclone is accompanied by thunderstorms. Hurricanes can cause catastrophic damage to coastlines and several hundred kilometres inland. They are classified into five categories based on their wind speed, central pressure, and damage potential. Category Three and higher hurricanes are considered major hurricanes.




Saffir-Simpson Hurricane Scale

Sustained Winds (km/h) - Damage - Storm Surge

1) 120-150 Sustained Winds (km/h) Unanchored mobile homes, vegetation and signs. 1.2-1.5m 2 ) 150-170(km/h) All mobile homes, roofs, small crafts, flooding. 1.8-2.4m
3 ) 170-210 (km/h)Small buildings, low-lying roads cut off. 2.7-3.7m
4 ) 210-250 (km/h)Roofs destroyed, trees down, roads cut off, mobile homes destroyed. Beach homes flooded. 4-5.5m
5 )More than 250 (km/h)Most buildings destroyed. Vegetation destroyed. Major roads cut off. Homes flooded. 5.5m+
Source: Federal Emergency Management Agency (FEMA), USA

Tuesday, June 5, 2007

At least 7,000 people living in coastal areas have already been evacuated.

OMAN: Authorities on high alert for approaching cyclone
05 Jun 2007 16:41:24 GMT05 Jun 2007 16:41:24 GMT
Source: IRIN

DUBAI, 5 June 2007 (IRIN) - Oman's police and army are on high alert in anticipation of a powerful tropical cyclone that is expected to hit the Gulf country's shores late on Tuesday or on Wednesday. At least 7,000 people living in coastal areas have already been evacuated.
"There is no definite number of people who have left the areas expected to be hit by the cyclone as the people moved by themselves as a precautionary measure. Many are staying in friends' or relatives' houses - that's why we don't have an exact number," Colonel Abdallah al-Harathi, head of the Omani police's public relations department, told IRIN by phone.
"We hope they will be able to go back to their homes in 72 hours, after the cyclone passes. We are highly prepared and ready to provide them with means of transport, food, blankets and medical services in case they need them. Until now, there are no injuries and the situation is under control."
Cyclone Gonu originated in the Gulf Sea and is traveling in a westerly north-westerly direction at 7-10kmph with accompanying winds of up to 200kmph and waves of up to 8m high, according to meteorologists. It will be the first time most citizens of Oman will have experienced such strong winds.
"Imagine that you live directly on the Gulf, but in a place where it hardly ever rains, and where a hurricane has never hit, for at least a generation - for more than 60 years," Jeff Masters, a senior meteorologist at The Weather Underground, wrote.
"Your community and many like yours are situated not only directly on the water, but near or in large dry riverbeds on the coastal plain, which is a narrow strip of sandy shoreline that is the drop-off for the 3,000-foot mountain range behind it… This is the eastern coast of Oman, where communities line the shoreline which is shortly going to be experiencing a major hurricane. We can only hope that the danger is understood and that all of these communities have evacuated to higher ground and a safer location," Masters added.
Lieutenant-General Malik bin Suleiman al-Ma'amari, inspector-general of Oman's police and customs and head of the National Committee for Civil Defence, told reporters that the cyclone would approach Oman from the east and hit coastal areas from Ras Madrakah to Ras al-Hadd. It would then had north in the direction of the Sharqiyah region and part of al-Hajar al-Sharqi and al-Hajar al-Gharbi.
"We encourage people to move from the hazardous areas, particularly Masirah and al-Halaniyat islands, to more secure areas," al-Ma'amari said, adding that the police and civil defence have deployed specialist units and vehicles in the areas likely to be affected by the cyclone. He also said the police, in cooperation with government departments, will provide shelter and food for people affected by the cyclone.
United Nations agencies are also on standby to assist. "Oman is always highly prepared to face emergency situations. It will be clear what the requirements are once the cyclone calms down," Hassan Shawareb, of UNICEF Oman, said.
Meteorologists are still unsure of the exact impact Cyclone Gonu will have on Oman as its direction could become more northerly, in which case the Sultanate would not feel the full force of the storm. Either way, it is due to move on and hit Iran's coast after Oman and then is likely to hit Pakistan, where it could cause significant flooding of the coast near Karachi, the country's commercial capital and largest city.