Thursday, June 7, 2007

ஓமனை தாக்கிய கோனு புயல்.

***
அல்லாஹ்வையன்றி (வேறு) நாயன் இல்லை. அவனே உயிர்ப்பிக்கிறான்; அவனே மரிக்கச் செய்கிறான்; அவனே உங்கள் இறைவனாகவும் முன் சென்ற உங்கள் மூதாதையரின் இறைவனாகவும் இருக்கின்றான். ஆனால், அவர்கள்(இறைநிராகரிப்பாளர்கள்) சந்தேகத்தில் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். ஆகவே, வானம் ஒரு தெளிவான புகையைக் கொண்டு வரும் நாளை நீர் எதிர் பார்ப்பீராக. (அப்புகை) மனிதர்களைச் சூழ்ந்து கொள்ளும்; ''இது நோவினை செய்யும் வேதனையாகும்.'' அல்-குர்ஆன் 44:08,09,10,11.

****************************************

----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
செய்தி: மஸ்கட் (ஓமன்): கோனு என பெயரிடப்பட்ட புயல், ஓமன் நாட்டின் கிழக்குக் கடற்கரையை செவ்வாய்கிழமை அதிகாலை தாக்கியது. இதையடுத்து ராணுவம் உஷார்படுத்தப்பட்டது. கடலோரப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு அனுப்பப்பட்டனர்.இந்தியப் பெருங்கடலில் உருவான கோனு புயல், வட மேற்காக நகர்ந்து, ஓமன் நாட்டின் கிழக்கில் உள்ள சுர் மற்றும் ரா ஆகிய பகுதிகளின் கடற்கரையை அடைந்தது.



பலத்த சூறாவளிக் காற்றுடன் கன மழையும் பெய்ததால் அந்தப் பகுதிகளில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. புதன்கிழமை அதிகாலை இந்தப் புயல் கரையைக் கடந்தது. இதனால் அப்பகுதியில் பெரும் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக அஞ்சப்படுகிறது. இருப்பினும், சுர் மற்றும் ரா ஆகிய நகரங்களில் எந்த அளவுக்கு பாதிப்பு ஏற்பட்டது என்பது தெளிவாகத் தெரியவில்லை. புயல் காரணமாக தலைநகர் மஸ்கட் உள்ளிட்ட பல நகரங்களில் கன மழை பெய்து வருகிறது. புயல் காரணமாக மணிக்கு 170 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்றும், 12 மீட்டர் அளவுக்கு கடல் அலைகளும் எழுந்தன. ஓமன் நாட்டில் எழுந்த புயல்களிலேய மிகவும் மோசமான புயல் இதுதான் என்று அந்நாட்டு பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது. புயல் காரணமாக ஓமனில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. அல் ஹலானியத், மசிரா தீவுகளில் வசிப்பவர்கள் பாதுகாப்பான பகுதிகளுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டனர். கடலோரப் பகுதிகளில் வசிப்பவர்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு அப்புறப்படுத்தப்பட்டனர். அப்பகுதிகளில் உச்சகட்ட அபாய அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது.

தொலைத்தொடர்பு வசதிகள் துண்டிக்கப்படும் என்பதால் வயர்லஸ் மற்றும் சாட்டிலைட் போன்களுக்கு அரசு ஏற்பாடு செய்திருந்தது. இதன் மூலம் மீட்பு நடவடிக்கைகளில் சுணக்கம் ஏற்படாமல் தடுக்க அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைய மேற்கொண்டுள்ளது. கடந்த 1890ம் ஆண்டு ஓமனைத் தாக்கிய புயலில் 700 பேர் பலியானார்கள். அதன் பின்னர் எழுந்துள்ள மோசமான புயல் கோனுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

வானம் ஒரு தெளிவான புகையைக் கொண்டு வரும்நாளை நீர் எதிர் பார்ப்பீராக. (அப்புகை) மனிதர்களைச் சூழ்ந்து கொள்ளும்; அல்-குர்ஆன்44:10


**********************************************************************


அல்லாஹ் எந்த ஓர் ஆத்மாவுக்கும் அது தாங்கிக் கொள்ள முடியாத அளவு கஷ்டத்தை கொடுப்பதில்லை; அது சம்பாதித்ததின் நன்மை அதற்கே; அது சம்பாதித்த தீமையும் அதற்கே!

(முஃமின்களே! பிரார்த்தனை செய்யுங்கள்:) ''எங்கள் இறைவா! நாங்கள் மறந்து போயிருப்பினும், அல்லது நாங்கள் தவறு செய்திருப்பினும் எங்களைக் குற்றம் பிடிக்காதிருப்பாயாக! எங்கள் இறைவா! எங்களுக்கு முன் சென்றோர் மீது சுமத்திய சுமையை போன்று எங்கள் மீது சுமத்தாதிருப்பாயாக! எங்கள் இறைவா! எங்கள் சக்திக்கப்பாற்பட்ட (எங்களால் தாங்க முடியாத) சுமையை எங்கள் மீது சுமத்தாதிருப்பாயாக! எங்கள் பாவங்களை நீக்கிப் பொறுத்தருள்வாயாக! எங்களை மன்னித்தருள் செய்வாயாக! எங்கள் மீது கருணை புரிவாயாக! நீயே எங்கள் பாதுகாவலன்; காஃபிரான கூட்டத்தாரின் மீது (நாங்கள் வெற்றியடைய) எங்களுக்கு உதவி செய்தருள்வாயாக!'' (அல்-குர்ஆன் 2:286)

...நீங்கள் முஸ்லிம்களாக அன்றி மரணிக்காதீர்கள்.'' (அல்-குர்ஆன் 2:132)


*********

No comments: